என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரம்பலூர் மாவட்டத்தில் 652 மையங்களில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்
Byமாலை மலர்15 Oct 2018 4:17 PM GMT (Updated: 15 Oct 2018 4:17 PM GMT)
பெரம்பலூர் மாவட்டத்தில் 652 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்றது.
பெரம்பலூர்:
இந்திய தேர்தல் ஆணையம் 1.1.2019 அன்று தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியடைந்துள்ள நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், பெயர் நீக்கல், முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளவும் கடந்த மாதம் 1-ந்தேதி முதல் வருகிற 31-ந்தேதி வரை விண்ணப்பங்கள் பெற ஆணையிட்டுள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் உள்ள 332 வாக்குச்சாவடிகளிலும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் 320 வாக்குச்சாவடி மையங்களிலும் என மொத்தம் 652 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நேற்று நடைபெற்றன.
சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த வாக்காளர் பட்டியலில் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாமில் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் புதிய வாக்காளர்களாக தனது பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்த்து கொண்டனர். வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், பெயர் நீக்கல், முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள, வாக்காளர்கள் அதற்கான விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து அதிகாரியிடம் வழங்கினர். இதில் வேப்பந்தட்டை தாலுகா வேப்பந்தட்டையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமினை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா ஆய்வு செய்தார். இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 4-ந்தேதி வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய தேர்தல் ஆணையம் 1.1.2019 அன்று தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியடைந்துள்ள நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், பெயர் நீக்கல், முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளவும் கடந்த மாதம் 1-ந்தேதி முதல் வருகிற 31-ந்தேதி வரை விண்ணப்பங்கள் பெற ஆணையிட்டுள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் உள்ள 332 வாக்குச்சாவடிகளிலும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் 320 வாக்குச்சாவடி மையங்களிலும் என மொத்தம் 652 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நேற்று நடைபெற்றன.
சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த வாக்காளர் பட்டியலில் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாமில் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் புதிய வாக்காளர்களாக தனது பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்த்து கொண்டனர். வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், பெயர் நீக்கல், முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள, வாக்காளர்கள் அதற்கான விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து அதிகாரியிடம் வழங்கினர். இதில் வேப்பந்தட்டை தாலுகா வேப்பந்தட்டையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமினை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா ஆய்வு செய்தார். இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 4-ந்தேதி வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X