search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போச்சம்பள்ளி அருகே பூச்சி மருந்து குடித்த வாலிபர் மரணம்
    X

    போச்சம்பள்ளி அருகே பூச்சி மருந்து குடித்த வாலிபர் மரணம்

    போச்சம்பள்ளி அருகே வேலைக்கு செல்லாத மகனை தாய் திட்டியதால் மனமுடைந்த வாலிபர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகேயுள்ள முள்ளம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி சுசீலா (வயது65). இவரது மகன் பெரியசாமி (26). இவர் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதனால் தாய் சுசீலா, பெரியசாமியை திட்டியதாக தெரிகிறது. 

    இதனால் மனமுடைந்த பெரியசாமி நேற்று வயலுக்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்ற பெரியசாமி நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து பாரூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×