search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பண்ருட்டி அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை - 7 பேர் மீது வழக்குபதிவு
    X

    பண்ருட்டி அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை - 7 பேர் மீது வழக்குபதிவு

    கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை செய்யப்பட்டது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் என்ஜினீயர் உள்பட 7 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த பி.ஆண்டிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் சத்யநாதன் (வயது 30). இவர் என்ஜினீயரிங் படித்து விட்டு தனியார் கம்பெனி ஒன்றில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரம்யா (26).

    இவர்களுக்கு 1.12.2016 அன்று திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து சில மாதங்கள் மட்டுமே அவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்த்து வந்தனர். பின்னர் சத்யநாதன் குடும்பத்தினர் ரம்யாவை சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து ரம்யா பண்ருட்டி அனைத்து மகளிர் போலீ சில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    எனது திருமணத்தின் போது 32 பவுன் நகை ரூ.5 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டது. திருமணம் முடிந்த சில மாதங்களிலே கூடுதல் வரதட்சணை கேட்டு எனது கனவர் சத்யநாதன் சித்ரவதை செய்ய தொடங்கினார்.

    இதைத்தொடர்ந்து நான் எனது பெற்றோர் வீட்டுக்கு சென்று 10 பவுன் நகையும், ரூ.10 லட்சமும் வாங்கி கொடுத்தேன். அதன் பின்னரும் எனது கணவர் மீண்டும் வரதட்சணை வாங்கி வரும்படி சித்ரவதை செய்தார். இதற்கு எனது மாமனார் கோவிந்தசாமி, மாமியார் தமிழ் செல்வி, கணவரின் தம்பி சண்முகபிரியன், அவரது மனைவி ஸ்ரீமதி, உறவினர்கள் சந்திர மோகன், இளவரசன் ஆகியோர் உடந்தையாக இருந்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறியுள்ளார்.

    அதன்பேரில் சத்யநாதன் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×