என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பல்லடம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல் - கூலித்தொழிலாளி பலி
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள குள்ளம் பாளையத்தை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் பழனிசாமி என்கிற ராமராஜ் (27). கூலி தொழிலாளி. இவரது உறவினர் கிருஷ்ண மூர்த்தி (24). இவர்கள் இருவரும் நேற்று இரவு வாவிபாளையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
பல்லடம் - உடுமலை சாலையில் அவர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே கோவை காளப்பட்டியை சேர்ந்த அமல்தாஸ், அவரது மனைவி சுகுணா மற்றும் 2 குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் வந்தார்.திடீரென இரு மோட்டார் சைக்கிள்களும் மோதிக் கொண்டது. இதில் ராமராஜ், அவரது உறவினர் கிருஷ்ண மூர்த்தி, அமல்தாஸ் ஆகியோர் காயம் அடைந்தனர்.பலத்த காயம் அடைந்த ராமராஜ் பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சைக்கு பின் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலன் இன்றி இன்று அதிகாலை இறந்தார். கிருஷ்ண மூர்த்தி, அமல்தாஸ் ஆகியோர் பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இது குறித்து காமநாயக்கன் பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்