search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒண்டிப்புதூரில் கட்டிடத்தொழிலாளி தற்கொலை
    X

    ஒண்டிப்புதூரில் கட்டிடத்தொழிலாளி தற்கொலை

    ஒண்டிப்புதூரில் கட்டிடத் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிங்காநல்லூர், அக்.15-

    தர்மபுரியை சேர்ந்தவர் சேகர் (வயது 26). கட்டிடத்தொழிலாளி. இவரது மனைவி மாரி (20). சேகர் குடும்பத்துடன் கோவை ஒண்டிப்புதூர் ராமச்சந்திரன் லே-அவுட் பகுதியில் தங்கி வேலைக்கு சென்று வந்தார்.

    இந்நிலையில் இன்று காலை மாரி எழுந்து பார்த்தபோது சேகர் தூக்கில் பிணமாக தொங்கினார். இது குறித்து சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது குடும்பத்தகராறு காரணமாக சேகர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் கூறினர்.

    Next Story
    ×