search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாரூர் அருகே ரெயில் முன்பாய்ந்து வாலிபர் தற்கொலை
    X

    திருவாரூர் அருகே ரெயில் முன்பாய்ந்து வாலிபர் தற்கொலை

    திருவாரூர் அருகே ரெயில் முன்பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே உள்ள சன்னாநல்லூர் பகுதியில் ரெயில்வே கேட் உள்ளது. இங்கிருந்து சிறிது தூரம் தொலைவில் ரெயில்வே தண்டவாளத்தில் ஒரு வாலிபரின் உடல் சிதறி கிடந்தது. இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் இதைத் பார்த்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதனால் ரெயில்வே போலீசாரும், நன்னிலம் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்து கிடந்த வாலிபரின் உடலை மீட்டனர். அப்போது வாலிபர் ரெயிலில் அடிபட்டு இறந்தது தெரியவந்தது. பின்னர் அவர் யார்? என்று விசாரணை நடத்தினர்.

    இதில் அந்த வாலிபர் முடிகொண்டான் பகுதியை சேர்ந்தவர் என்பதும் அவரது பெயர் கிருஷ்ணன் (வயது 25). என்பது தெரியவந்தது. மேலும் இது குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வாலிபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    கிருஷ்ணன் நேற்று இரவு அவரது உறவினர்களுடன் சன்னாநல்லூருக்கு வந்துள்ளார். பின்னர் அவரது உறவினர்கள் முடி கொண்டான் பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது கிருஷ்ணன் அவர்களிடம் நீங்கள் செல்லுங்கள் நான் பிறகு வருகிறேன் என்று கூறியுள்ளார்.

    இந்த நிலையில் இன்று காலை அவர் உடல் சிதறி இறந்து கிடக்கிறார். இதனால் அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. கிருஷ்ணன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×