search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செவ்வாப்பேட்டை அருகே வாடகைக்கு வீடு எடுத்து கொள்ளையில் ஈடுபட்ட சென்னை வாலிபர்கள்
    X

    செவ்வாப்பேட்டை அருகே வாடகைக்கு வீடு எடுத்து கொள்ளையில் ஈடுபட்ட சென்னை வாலிபர்கள்

    செவ்வாப்பேட்டை அருகே வாடகைக்கு வீடு எடுத்து கொள்ளையில் ஈடுபட்ட சென்னை வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செவ்வாப்பேட்டை:

    செவ்வாப்பேட்டை எம்.ஜி.கே. நகரை சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி தனசேகர். இவரது மனைவி பவானி. கடந்த வாரம் வேப்பம்பட்டை அடுத்த கந்தன் கொல்லை பகுதியில் சென்றபோது பவானி கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்துச் சென்றனர். இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது நகை பறிப்பில் ஈடுபட்டது சென்னை சூளையை சேர்ந்த பிரகாஷ் என்கிற பூனை பிரகாஷ், வியாசர்பாடியை சேர்ந்த அருண்குமார் என்பது தெரிந்தது.

    இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான தனிப்படை போலீசார் பிரகாசை கைது செய்தனர். அருண்குமார் ஏற்கனவே எம்.கே.பி. நகரில் நடந்த வழிப்பறி வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார் என்பது தெரிந்தது.கைதான பிரகாசிடம் இருந்து 4 பவுன் நகை மீட்கப்பட்டது.

    பவானியிடம் நகை பறிக்கும் சம்பவம் நடந்த போது தண்ணீர்குளம் பகுதியில் அனிதா என்பவர் விபத்தில் சிக்கி இருந்தார். அவரது செல்போன் மாயமாகி இருந்தது. இதுபற்றி அனிதா போலீசில் புகார் செய்தார். விசாரணையில் கொள்ளையர்களான பிரகாசும், அருண்குமாரும் அதனை பயன்படுத்தியது தெரிந்தது.

    இதையடுத்து பிரகாசை போலீசார் கைது செய்த போது பவானியிடம் நகை பறித்ததை ஒப்புக் கொண்டனர்.

    இதுகுறித்து கைதான பிரகாஷ் போலீசாரிடம் கூறும்போது, ‘‘பவானியிடம் நகை பறித்து தப்பி வந்த போது தண்ணீர்குளம் பகுதியில் அனிதா விபத்தில் சிக்கி கிடந்தார். அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்தோம். அப்போது அவரது செல்போனை திருடி சென்று விட்டோம். இதனால் நாங்கள் சிக்கிக்கொண்டோம்.

    கொள்ளையில் ஈடுபடுவதற்காக காக்களூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தோம்’’ என்று கூறியுள்ளார். கைதான பிரகாசின் கூட்டாளிகள் யார்? யார் என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×