search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு அரியலூர் - பெரம்பலூரில் தீயணைப்பு துறையினர் ஒத்திகை
    X

    உலக பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு அரியலூர் - பெரம்பலூரில் தீயணைப்பு துறையினர் ஒத்திகை

    உலக பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு அரியலூர், பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் தீயணைப்பு துறையினர் சார்பில், பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை நடந்தது.
    அரியலூர்:

    பேரிடர் மேலாண்மை சார்பில் உலக பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு நேற்று அரியலூர் நிர்மலா மெட்ரிக் பள்ளியிலிருந்து தொடங்கிய விழிப்புணர்வு ஊர்வலத்தை அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் கலந்து கொண்ட அரியலூர் பள்ளி மாணவ, மாணவிகள் தவிர்ப்போம், தவிர்ப்போம் வெள்ள நீரில் குளிப்பதை தவிர்ப்போம், துண்டிப்போம் துண்டிப்போம் தீ விபத்து, இடி மின்னலின் போது மின் இணைப்பை துண்டிப்போம், நிற்க வைக்காதீர் நிற்க வைக்காதீர் இடி, மின்னலின் போது கால்நடைகளை மரத்திற்கடியில் நிற்க வைக்காதீர். தெரிவிப்போம் தெரிவிப்போம் பேரிடர் நிகழ்வுகளை கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1077-க்கு தெரிவிப்போம் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும், விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறும் சென்றனர். இந்த ஊர்வலம் அரியலூர் பஸ் நிலையத்தில் முடிவடைந்தது.

    தொடர்ந்து அரியலூர் பஸ் நிலையத்தில் மாவட்ட தீயணைப்பு துறையினர் சார்பில், பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை நடந்தது. அப்போது அரியலூர் தீயணைப்பு நிலைய அதிகாரி பன்னீர்செல்வம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கலெக்டர் விஜயலட்சுமி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள், அலுவலர்கள் முன்னிலையில் பேரிடர் தற்காப்பு நடவடிக்கைகளை செயல் விளக்கம் மூலம் காண்பித்தனர். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், அரியலூர் கோட்டாட்சியர் சத்தியநாராயணன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி, தாசில்தார்கள் விக்டோரியா (பேரிடர்மேலாண்மை), முத்துலட்சுமி (அரியலூர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×