search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தனியார் பஸ்சில் இருந்து தவறி விழுந்து காவலாளி பலி- டிரைவர், கண்டக்டர் கைது
    X

    தனியார் பஸ்சில் இருந்து தவறி விழுந்து காவலாளி பலி- டிரைவர், கண்டக்டர் கைது

    கோவையில் தனியார் பஸ்சில் இருந்து தவறி விழுந்த காவலாளி பரிதாபமாக உயிரிழந்தார். டிரைவர், கண்டக்டரை போலீசார் கைது செய்தனர்.

    கோவை:

    கோவை கணபதி அருகே உள்ள விலாங்குறிச்சியை சேர்ந்தவர் அர்ஜூனன் (வயது 68). இவர் சரவணம்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று வேலைக்கு செல்வதற்காக கணபதியில் இருந்து தனியார் பஸ்சில் ஏறினார்.

    பஸ் ஜி.கே.எஸ்.நகர் பகுதியில் வளைவு பகுதியில் வேகமாக சென்றதாக கூறப்படு கிறது. அப்போது பஸ் படிக்கட்டு அருகே நின்ற அர்ஜூனன் எதிர்பாராத விதமாக பஸ்சில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உடனே பயணிகள் சத்தம் போட்டு பஸ்சை நிறுத்தினர். பின்னர் அர்ஜூனனை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அர்ஜூனன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ் பெக்டர் வீரம்மாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக பஸ் டிரைவரான அன்னூரை சேர்ந்த லோகேஸ்(24), கண்டக்டர் வடிவேல்(28) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    Next Story
    ×