search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொப்பூர் அருகே லாரி கவிழ்ந்து டிரைவர் பலி
    X

    தொப்பூர் அருகே லாரி கவிழ்ந்து டிரைவர் பலி

    தொப்பூர் அருகே லாரி கவிழ்ந்த விபத்தில் டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    தருமபுரி:

    விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர் பேட்டை அருகேயுள்ள ஒத்தல்நத்தம் பகுதியை சேர்ந்த சிவா (வயது28), லாரி டிரைவரான இவர் சோலாப்பூரில் இருந்து மதுரைக்கு சர்க்கரை லோடு ஏற்றி கொண்டு சென்று கொண்டிருந்தார். 

    இன்று அதிகாலை தருமபுரி மாவட்டம், தொப்பூர் மலைப்பாதை வளைவு பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகே டிரைவரின் கட்டுபாட்டை இழந்து லாரி சாலையில் கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே சிவா பரிதாபமாக உயிரிழந்தார். 

    இது குறித்து தகவல் அறிந்த தொப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான லாரி டிரைவர் சிவா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இதையடுத்து போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் கவிழ்ந்து கிடந்த லாரியை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் போக்குவரத்தை சரி செய்யப்பட்டது. இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×