search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போச்சம்பள்ளி அருகே மாணவி மாயம்
    X

    போச்சம்பள்ளி அருகே மாணவி மாயம்

    போச்சம்பள்ளி அருகே உறவினர் வீட்டுக்கு சென்ற மாணவி மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்துள்ள சிறுவயலை சேர்ந்தவர் கோவிந்தராஜிலு. இவரது மகள் அட்ஷிதா (வயது (17). இவர் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். 

    அட்ஷிதா கடந்த 10-ந் தேதி பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். பின்னர் வீட்டில் உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. 

    அட்ஷிதா குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. எனவே கோவிந்தராஜிலு போச்சம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருக்கின்றனர்.
    Next Story
    ×