search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆண்டிப்பட்டி அருகே மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல்
    X

    ஆண்டிப்பட்டி அருகே மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல்

    ஆண்டிப்பட்டி அருகே மணல் கடத்த பயன்படுத்திய மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மணல் கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு விவசாயம் மற்றும் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    மயிலாடும்பாறை சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் சிறார் பாலம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு 2 பேர் மாட்டு வண்டியில் மணல் கடத்திக் கொண்டு இருந்தனர்.

    போலீசார் 2 பேரையும் பிடித்து விசாரித்ததில் அவர்கள் குமணன் தொழுவைச் சேர்ந்த ராஜ் (வயது 35), செல்வக்குமார் (34) என தெரிய வந்தது. 2 பேரையும் கைது செய்து மாட்டு வண்டியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×