என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேலம் அருகே பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலி திருட்டு
Byமாலை மலர்14 Oct 2018 10:48 AM GMT (Updated: 14 Oct 2018 10:48 AM GMT)
சேலம் அருகே பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலி திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
சேலம் அருகே உள்ள சேலத்தாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சடையப்பன். இவரது மனைவி ஜம்பு . இவர் நேற்று லீ-பஜார் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்குவதற்கு பணத்தை எடுத்துக் கொண்டு பஸ்சில் வந்து இறங்கினார். லீ பஜாரில் பொருட்கள் வாங்கிவிட்டு திரும்பும்போது கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை காணவில்லை. இதனால் ஜம்பு அதிர்ச்சி அடைந்தார்.
யாரோ நைசாக நகையை திருடி உள்ளனர் என்பது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் இருக்கும் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X