என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு லாரி வரத்து குறைவால் காய்கறி விலை உயர்வு
சென்னை:
கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த மாதம் வீழ்ச்சி அடைந்திருந்த காய்கறிகள் விலை இப்போது உயர்ந்து வருகிறது.
புரட்டாசி மாதம் காய்கறி தேவை அதிகரித்துள்ள நிலையில் லாரி வரத்து குறைவாக உள்ளதால் விலை அதிகமாகி விட்டது. அதிலும் குறிப்பாக காலையில் ஒரு விலை மாலையில் ஒரு விலை என வித்தியாசம் உள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி ஒரு கிலோ விலை விபரம் வருமாறு:-
கத்தரிக்காய் -ரூ.25, தக்காளி -ரூ.12, நவீன்தக்காளி -ரூ.13, வெங்காயம் -ரூ.16
சின்னவெங்காயம் -ரூ.35, உருளைக்கிழங்கு -ரூ.25, கேரட் -ரூ.40
பீன்ஸ் -ரூ.50, பீட்ரூட் -ரூ.14, சவ்சவ் -ரூ.18, முள்ளங்கி -ரூ.17, கோஸ் -ரூ.10
விலை அதிகமானது குறித்து கோயம்பேடு காய்கறி வியாபாரிகள் சங்க செயலாளர் முத்துகுமார் கூறியதாவது:-
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு லாரி வரத்து குறைந்துள்ளதால் விலை ஏற்றம் காணப்படுகிறது.
ஒரு கடைக்கு 4 லாரிகளில் காய்கறிகளை கொண்டு வந்தால் 2 லாரிகளை மட்டும் முதலில் மார்க்கெட்டுக்குள் அனுமதிக்கிறார்கள். 2 லாரியை வெளியில் நிறுத்தி விடுகிறார்கள். காய்கறிகளை இறக்கி விற்ற பிறகே வெளியில் நிற்கும் லாரியை உள்ளே அனுமதிக்கிறார்கள்.
இதனால் காலையில் ஒரு விலை, மாலையில் ஒரு விலை என விற்க வேண்டிய சூழல் நிலவுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்