search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொகுதிப்பக்கம் எட்டிப் பார்க்காத கருணாஸ்- அமைச்சர் மணிகண்டன்
    X

    தொகுதிப்பக்கம் எட்டிப் பார்க்காத கருணாஸ்- அமைச்சர் மணிகண்டன்

    தொகுதிப்பக்கம் எட்டிப் பார்க்காத கருணாஸை பற்றி கவலைப்படத்தேவையில்லை என்று ஆர்.எஸ்.மங்கலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் மணிகண்டன் பேசினார். #ADMK #TNMinister #Manikandan #Karunas
    தொண்டி:

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம், தோட்டா மங்கலம், அஞ்சுகோட்டை, தொண்டி, வட்டாணம் ஆகிய பகுதிகளில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலக கட்டிடங்களை அமைச்சர் மணிகண்டன் திறந்து வைத்தார்.

    40 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் யாரும் வைகையில் இருந்து தண்ணீர் பெற்றுத்தரவில்லை. ஆனால் அம்மா ஆட்சியில் வைகையில் இருந்து தண்ணீர் கொண்டுவரப்பட்டு குறிப்பாக ராமநாதபுரத்தை சுற்றியுள்ள பகுதிகளிலெல்லாம் தண்ணீரை நிரப்பி ஏழை, எளிய மக்களின் குடிநீர் பிரச்சனை தீர்க்கப்பட்டது.

    விவசாயத்திற்காக பெரிய கண்மாய் நிரப்பப்பட்டுள்ளது. காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் கிடைக்காத பகுதிகளை தெரிவித்தால் உடனடியாக கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும்.

    திருவாடானை சட்டமன்ற தொகுதியில் மக்களின் குறைகள் என்ன? மக்களுக்கு என்னென்ன தேவைகள் இருக்கிறது? என்று கேட்டு அறிய வேண்டிய சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் நம்மிடத்திலே இல்லை.


    அவர் இருந்தும் இல்லாத நிலை உள்ளது. இந்த பக்கம் வரவே மாட்டேன் என்று அடம்பிடித்துக்கொண்டு சென்னையில் சுற்றிக் கொண்டிருக்கிறார்.

    அ.தி.மு.க.வின் கொள்கைகளை குழி தோண்டி புதைத்து விட்டு தி.மு.க. தலைவர் வீட்டிலே போய் உட்கார்ந்திருக்கிறார்.

    எனவே அவரைப்பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த பகுதி மக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்துகொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #ADMK #TNMinister #Manikandan #Karunas
    Next Story
    ×