search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரணமல்லூர் அருகே கோவில்களில் உண்டியலை உடைத்து திருடிய 2 பேர் கைது
    X

    பெரணமல்லூர் அருகே கோவில்களில் உண்டியலை உடைத்து திருடிய 2 பேர் கைது

    பெரணமல்லூர் அருகே கோவில்களில் உண்டியலை உடைத்து திருடியது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சேத்துப்பட்டு:

    பெரணமல்லூரை அடுத்த முனுகப்பட்டு கிராமத்தில் ராமலிங்கம் சாமி கோவிலும், வெங்கடேசப்பட்டி கிராமத்தில் அனுமான் கோவிலும் உள்ளது. இந்த 2 கோவில்களிலும் கடந்த 10-ந் தேதி இரவு உண்டியல்களை உடைத்து அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்று உள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் பெரணமல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    நேற்று முன்தினம் பெரணமல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜானகிராமன், கன்னியப்பன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருமணி கிராமத்தில் பஸ் நிலையம் அருகே சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், முனுகப்பட்டு கிராமத்தை சேர்ந்த சதீஷ் (வயது 22) மற்றும் திருமணி கிராமத்தை சேர்ந்த ஹரிஷ் (18) என்பதும், ராமலிங்க சாமி கோவில், அனுமான் கோவிலில் உண்டியலை உடைத்து திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.
    Next Story
    ×