search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியலூரில் பெண்ணிடம் நகை கொள்ளை
    X

    அரியலூரில் பெண்ணிடம் நகை கொள்ளை

    அரியலூரில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் நகையை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஆர்.எஸ்.மாத்தூர்:

    அரியலூர் மாவட்டம் வெங்கனூர் அருகே உள்ள கொரட்தாகுடியை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி ஜெயா. இவர்கள் 2 பேரும் நேற்று இரவு காற்றுக்காக கதவை திறந்து வைத்து விட்டு வீட்டின் முன்பக்க அறையில் தூங்கினர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் ஜெயாவின் கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்து சென்றனர்.

    அதே தெருவில் உள்ள மற்றொரு வீட்டை சேர்ந்தவர்  விஜயகுமார் (வயது 47). இவர் வீட்டை பூட்டி வெளியூர் சென்றார். மர்ம நபர்கள் இவரது வீட்டு பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து அதிலிருந்த 3 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர்.

    இந்த 2 சம்பவம் குறித்து வெங்கனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இதைப்போல் நேற்று ஆண்டிமடத்தில் 2 இடங்களில் கொள்ளை சம்பவம்  நடந்துள்ளது. இப்பகுதியில் தொடர் கொள்ளை சம்பவம் நடந்து வருவதால் பொது மக்கள் அச்சத்தில்  உள்ளனர்.மேலும் போலீசார் ரோந்து பணியை அதிகரித்து கொள்ளை சம்பவத்தை தடுக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  #tamilnews
    Next Story
    ×