search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போச்சம்பள்ளி அருகே தீக்குளித்த பெண் பலி
    X

    போச்சம்பள்ளி அருகே தீக்குளித்த பெண் பலி

    போச்சம்பள்ளி அருகே தீக்குளித்த பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே ஏ.மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி மலர் (வயது 30).

    கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்தது வந்தது தெரிய வந்தது. கடந்த மாதம் 18-ந் தேதி மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த மலர் வீட்டில் தனியாக இருந்தபோது மண்எண்ணையை தனது உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார்.

    இதில் உடல் முழுவதும் தீ பரவியது. இதனால் வலியால் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மலரை மீட்டு தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்ற இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து பாரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×