search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செல்போன் வாங்கியதாக கணவர் திட்டியதால் மனைவி குழந்தையுடன் மாயம்
    X

    செல்போன் வாங்கியதாக கணவர் திட்டியதால் மனைவி குழந்தையுடன் மாயம்

    செல்போன் வாங்கியதாக கணவர் திட்டியதால் மனைவி குழந்தையுடன் மாயமானார்.

    மதுரை:

    மதுரை பாலமேடு செட்டியார் தெருவைச் சேர்ந்தவர் நந்தினி (வயது 24). இவரது கணவர் கணேசன். இவர்களுக்கு தர்‌ஷன் (4) என்ற மகன் உள்ளான்.

    இந்த நிலையில் நந்தினி சமீபத்தில் புதிதாக செல்போன் வாங்கினார். அதற்கு கணேசன் ‘எனக்கு தெரியாமல் நீ எப்படி செல்போன் வாங்கலாம்?’ என்று கண்டித்தார்.

    இதையடுத்து கணவன் -மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த நிலையில் நந்தினி சம்பவத்தன்று காலை மகன் தர்‌ஷனுடன் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

    இது தொடர்பாக கணேசன் பாலமேடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ் பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து மாயமான தாய்-மகனை தேடி வருகிறார்.

    Next Story
    ×