search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாயல்குடி அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பெண் சாவு
    X

    சாயல்குடி அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பெண் சாவு

    சாயல்குடி அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாயல்குடி:

    சாயல்குடி அருகே உள்ள பீ.கீரந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன். இவரது மனைவி லட்சுமி (வயது 57).

    இவர் இன்று அதிகாலை வீட்டில் இருந்து வெளியே சென்றார். அப்போது சாலையில் மின் கம்பி அறுந்து கிடந்துள்ளது.

    அதனை லட்சுமி கவனிக்கவில்லை. இருளில் நடந்து சென்ற அவர் மின் கம்பியை மிதித்து விட்டார். இதனால் மின்சாரம் தாக்கப்பட்ட லட்சுமி, சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தார்.

    சிக்கல்போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். லட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழக்கரை அரசு ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து பெண் இறந்த சம்பவம் கீரந்தை கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×