என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தி.மு.க.வுடன் உறவு வைத்து அ.தி.மு.க.வை அழிக்கப் பார்க்கிறார் தினகரன்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
Byமாலை மலர்13 Oct 2018 9:30 AM GMT (Updated: 13 Oct 2018 9:30 AM GMT)
தி.மு.க.வுடன் உறவு வைத்து அ.தி.மு.க.வை தினகரன் அழிக்கப் பார்க்கிறார் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றம் சாட்டினார். #ADMK #TNMinister #DindigulSrinivasan #TTVDhinakaran #DMK
மதுரை:
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலையொட்டி தமிழக அரசின் சாதனைகளை வாக்காளர்களுக்கு எடுத்துக் கூற பெண்கள் பங்கேற்கும் சைக்கிள் பேரணி ஜெயலலிதா பேரவை சார்பில் வருகிற 24-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான பயிற்சி முகாம், மதுரை ரிங்ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது.
முகாமில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் பிரசாரம் செய்வதற்காக இங்கே திரண்டுள்ள பெண்களை பார்க்கும்போது மகளிர் மாநாடு போல இருக்கிறது. தமிழகம் தற்போது 19 அரசு துறைகளில் தலைசிறந்து விளங்கி வருகிறது.
1972-ல் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கிய போது முதல் வெற்றியை தந்தது ஒருங்கிணைந்த மதுரை மாவட்டம். இது போன்ற ஒரு வெற்றியை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் நாம் பெற வேண்டும். பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்.
டி.டி.வி. தினகரன் அ.தி.மு.க.வை அழிக்கப்பார்க்கிறார். தி.மு.க.வோடு உறவு வைத்துக்கொண்டு அ.தி.மு.க.வை வீழ்த்திவிடலாம் என கனவு காண்கிறார். அவரது எண்ணம் பலிக்காது. அவர் நமக்கு எதிரி அல்ல. தி.மு.க.தான் முக்கிய எதிரி. எனவே அ.தி.மு.க. வெற்றிக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். #ADMK #TNMinister #DindigulSrinivasan #TTVDhinakaran #DMK
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலையொட்டி தமிழக அரசின் சாதனைகளை வாக்காளர்களுக்கு எடுத்துக் கூற பெண்கள் பங்கேற்கும் சைக்கிள் பேரணி ஜெயலலிதா பேரவை சார்பில் வருகிற 24-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான பயிற்சி முகாம், மதுரை ரிங்ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது.
முகாமில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் பிரசாரம் செய்வதற்காக இங்கே திரண்டுள்ள பெண்களை பார்க்கும்போது மகளிர் மாநாடு போல இருக்கிறது. தமிழகம் தற்போது 19 அரசு துறைகளில் தலைசிறந்து விளங்கி வருகிறது.
1972-ல் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கிய போது முதல் வெற்றியை தந்தது ஒருங்கிணைந்த மதுரை மாவட்டம். இது போன்ற ஒரு வெற்றியை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் நாம் பெற வேண்டும். பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்.
புரட்சித்தலைவி அம்மா, பெண்களுக்கு பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தினார். அவரது வழியில் பெண்கள் நலம் காணும் அரசாக அ.தி.மு.க. அரசு திகழ்ந்து வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார். #ADMK #TNMinister #DindigulSrinivasan #TTVDhinakaran #DMK
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X