என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திண்டுக்கல் அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் பலி
Byமாலை மலர்13 Oct 2018 9:26 AM GMT (Updated: 13 Oct 2018 9:26 AM GMT)
திண்டுக்கல் அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் குறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகில் உள்ள ஆவிலிப்பட்டி வீரசின்னம்பட்டியை சேர்ந்த வடிவேல் மகன் செல்வமுருகன் (வயது4). வடிவேல் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். தாயாரும் இல்லாத நிலையில் செல்வமுருகன் தனது பாட்டி சரஸ்வதி பராமரிப்பில் இருந்து வந்தார்.
சரஸ்வதி 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்து வருகிறார். வேலைக்கு சென்ற அவர் தனது பேரனையும் உடன் அழைத்து சென்றார். அதே பகுதியில் பாலம் கட்டும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இந்த பள்ளத்தில் சமீபத்தில் பெய்த மழையினால் தண்ணீர் தேங்கி இருந்தது. விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் எதிர்பாராத விதமாக அந்த தண்ணீரில் மூழ்கினான்.
உடனே அருகில் இருந்தவர்கள் அவனை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இது குறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் அருகில் உள்ள ஆவிலிப்பட்டி வீரசின்னம்பட்டியை சேர்ந்த வடிவேல் மகன் செல்வமுருகன் (வயது4). வடிவேல் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். தாயாரும் இல்லாத நிலையில் செல்வமுருகன் தனது பாட்டி சரஸ்வதி பராமரிப்பில் இருந்து வந்தார்.
சரஸ்வதி 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்து வருகிறார். வேலைக்கு சென்ற அவர் தனது பேரனையும் உடன் அழைத்து சென்றார். அதே பகுதியில் பாலம் கட்டும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இந்த பள்ளத்தில் சமீபத்தில் பெய்த மழையினால் தண்ணீர் தேங்கி இருந்தது. விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் எதிர்பாராத விதமாக அந்த தண்ணீரில் மூழ்கினான்.
உடனே அருகில் இருந்தவர்கள் அவனை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இது குறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X