search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தருமபுரி அருகே விபத்தில் கல்லூரி மாணவர் பலி
    X

    தருமபுரி அருகே விபத்தில் கல்லூரி மாணவர் பலி

    தருமபுரி அருகே விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பீனியா பகுதியைச் சேர்ந்தவர் கவுரவ் (வயது 19). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.யு.சி 2-ம் படித்து வந்தார்.

    இவர் தனது நண்பர்கள் கீர்த்தி (19), கன்னிகாராஜ் (20), நெல்வின், ஜான்வில்லியம், அரவிந்த், சம்பத் ஆகியோர் காரில் நேற்று கொடைக்கானலுக்கு செல்வதற்காக புறப்பட்டனர்.

    காரை வேலூர் மாவட்டம் கன்னியம்பட்டியைச் சேர்ந்த கோபிநாத் (31) என்பவர் ஓட்டி சென்றார்.

    அப்போது கார் இன்று அதிகாலை 3 மணியளவில் தருமபுரி அருகே சோகத்தூர் கூட்ரோடு வந்தபோது முன்னால் சென்ற பஸ் சென்றது. அந்த பஸ்சை கார் முந்த முயன்றபோது பஸ் திடீரென்று பின்னால் வந்த காரை கவனிக்காமல் சாலையின் வலது பக்கமாக ஏறி சென்றது. உடனே பஸ் மீது மோதாமல் இருக்க காரை டிரைவர் திருப்பி உள்ளார். இதில் கார் நிலைத்தடுமாறி நடுரோட்டில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் கவுரவ்வுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவருடன் வந்த நண்பர்கள், டிரைவர் உள்பட 7 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கவுரவ்வை மேல் சிகிச்சைக்காக பெங்களூருக்கு நண்பர்கள் கொண்டு சென்றனர்.

    கவுரவ்வை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே கவுரவ் பரிதாபமாக இறந்தார். உடனே உடலை தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த டவுன் போலீசார் உடனே அங்கு வந்து கவுரவ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கார் விபத்துக்குள்ளானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சுற்றுலாவுக்கு சென்ற போது உடன் வந்த கல்லூரி மாணவர் இறந்தததால் உடன் வந்த நண்பர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். கவுரவ் இறந்த தகவலை அவரது பெற்றோர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர்கள் தருமபுரிக்கு வந்து கொண்டிருகின்றனர். இந்த சம்பவம் கவுரவ் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×