search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் பாகாயத்தில் லாரி மோதி மேஸ்திரி பலி
    X

    வேலூர் பாகாயத்தில் லாரி மோதி மேஸ்திரி பலி

    வேலூர் பாகாயத்தில் இன்று காலை லாரி மோதி மேஸ்திரி உடல் நசுங்கி இறந்தார்.

    வேலூர்:

    வேலூர் விருப்பாட்சிபுரத்தை சேர்ந்த வாசு மகன் சுபாஷ்(36) மேஸ்திரி. இன்று காலை மோட்டார் சைக்கிளில் பாகாயம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த லாரி மீது மோதியது. இதில் லாரியின் பின் டயருக்குள் சிக்கினார். அவர் மீது லாரி டயர் ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கி சுபாஷ் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    பாகாயம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின் றனர். இந்த விபத்தால் பாகாயத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×