search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்செந்தூரில் இரும்பு கடைகாரர் மீது தாக்குதல்- வாலிபருக்கு வலைவீச்சு
    X

    திருச்செந்தூரில் இரும்பு கடைகாரர் மீது தாக்குதல்- வாலிபருக்கு வலைவீச்சு

    திருச்செந்தூர் அருகே இரும்பு கடைகாரர் மீது தாக்குதல் நடத்திய வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் அருகே உள்ள அடைக்கலாபுரத்தைச் சேர்ந்தவர் மைக்கேல்ராஜ் (வயது 37). இரும்பு கடை நடத்தி வரும் இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலய திருவிழாவில் நடைபெற்ற அசன விருந்தில் கலந்துகொள்ள சென்றுள்ளார்.  அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த தாமஸ் செல்வன் அங்கிருந்த சேர்களை உடைத்துக் கொண்டிருந்தாராம் அதை மைக்கேல்ராஜ் தனது செல்போனில் படம் எடுத்ததாக கூறப்படுகிறது. 

    இந்த நிலையில் சம்பவத்தன்று மைக்கேல் ராஜ் ஆலயத்திற்கு அருகில் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த தாமஸ்செல்வன் மைக்கேல்ராஜை செல்போனில் எப்படி படம் எடுப்பாய் என கேட்டு அவரை அடித்து உதைத்துள்ளார். 

    இது குறித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தாமஸ் செல்வனை தேடி வருகின்றனர்.       
    Next Story
    ×