search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜோலார்பேட்டை அருகே பள்ளி மாணவன் கடத்தல்
    X

    ஜோலார்பேட்டை அருகே பள்ளி மாணவன் கடத்தல்

    ஜோலார்பேட்டை அருகே பள்ளி மாணவனை 5 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்றது குறித்து அவரது தாய் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். போலீசார் கும்பலை தேடி வருகிறார்கள்.

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே உள்ள சக்கரகுப்பம் நேதாஜிநகரை சேர்ந்தவர் விஜயகுமார் இவரது மனைவி பிரபாவதி இவர்களது மகன் சக்திவேல் (வயது 11). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார்.

    சக்திவேல் நேற்று காலை வீட்டின் அருகே உள்ள டீ கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு வேனில் வந்த 5பேர் கொண்ட கும்பல் மாணவனை திடீரென கடத்தி சென்று விட்டனர். இதனை கண்ட சக்திவேலின் நண்பன் இது குறித்து அவரது அம்மாவிடம் கூறினார்.

    அதிர்ச்சியடைந்த பிரபாவதி இது குறித்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவனை கடத்திய கும்பலை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×