search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பருவமழையை எதிர்கொள்ள 2 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார்
    X

    பருவமழையை எதிர்கொள்ள 2 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார்

    பருவமழையை எதிர்கொள்ள மீஞ்சூர் ஒன்றிய அலுவலகத்தில் 2 ஆயிரம் மணல் மூட்டைகளும் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் 2 ஆயிரம் மணல் மூட்டைகளும், சவுக்கு கம்புகளும் தயார் நிலையில் உள்ளன.
    பொன்னேரி:

    வடகிழக்கு பருவ மழை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பொன்னேரி ஆரணி ஆற்றின் கரைகள் பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    ஆற்றின் இருபுறங்களிலும் முள்செடிகள் அகற்றப்பட்டு ஜே.சி.பி. எந்திரம் மூலம் கரைகள் பலப்படுத்தப்படுகின்றன.

    மராமத்து பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் மீஞ்சூர் ஒன்றிய அலுவலகத்தில் 2 ஆயிரம் மணல் மூட்டைகளும் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் 2 ஆயிரம் மணல் மூட்டைகளும், சவுக்கு கம்புகளும் தயார் நிலையில் உள்ளன.

    இந்த தகவலை பொதுப் பணித்துறை உதவி செயற்பொறியாளர் முருகன் தெரிவித்தார்.

    Next Story
    ×