என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சியில் விமான நிலைய சுற்றுச்சுவர் மீது ஏர் இந்தியா விமானம் மோதியது - அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்ப்பு
Byமாலை மலர்12 Oct 2018 12:58 AM GMT (Updated: 12 Oct 2018 8:50 AM GMT)
திருச்சியில் இருந்து துபாய் சென்ற ஏர் இந்தியா விமானம் விமான நிலைய சுற்றுச்சுவரில் மோதிவிட்டு தொடர்ந்து பறந்ததால் பதற்றம் ஏற்பட்டது. #AirIndia
திருச்சி :
திருச்சியில் இருந்து மும்பை வழியாக துபாய் சென்ற ஏர் இந்தியா விமானம் திருச்சி விமான நிலைய சுற்றுச்சுவரில் மோதி விபத்தை ஏற்படுத்தியது. 130 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் தொழில்நுட்பகோளாறு காரணமாக குறைந்த உயரத்தில் பறந்ததால் விமானத்தின் சக்கரங்கள் 5 அடி உயர சுற்றுச்சுவரில் மோதிவிட்டு தொடர்ந்து பறந்தது.
மேலும், சுவருடன் சேர்ந்து அருகே இருந்த ஐஎல்எஸ் ஆண்டனா மீதும் உரசி சென்றது. இதில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. ஐஎல்எஸ் ஆண்டனாவும் நொறுங்கியது.
இதனால் விமானத்தில் பயணித்த 130 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. #AirIndia
திருச்சியில் இருந்து மும்பை வழியாக துபாய் சென்ற ஏர் இந்தியா விமானம் திருச்சி விமான நிலைய சுற்றுச்சுவரில் மோதி விபத்தை ஏற்படுத்தியது. 130 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் தொழில்நுட்பகோளாறு காரணமாக குறைந்த உயரத்தில் பறந்ததால் விமானத்தின் சக்கரங்கள் 5 அடி உயர சுற்றுச்சுவரில் மோதிவிட்டு தொடர்ந்து பறந்தது.
மேலும், சுவருடன் சேர்ந்து அருகே இருந்த ஐஎல்எஸ் ஆண்டனா மீதும் உரசி சென்றது. இதில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. ஐஎல்எஸ் ஆண்டனாவும் நொறுங்கியது.
இந்த எதிர்பாரா விபத்து காரணமாக விமானத்தில் லேசான அளவு சேதம் ஏற்பட்டுள்ளது. இதனை கவனிக்காமல் தொடர்ந்து பறந்த விமானம், பின்னர் மும்பையில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
இதனால் விமானத்தில் பயணித்த 130 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. #AirIndia
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X