என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரியலூரில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
Byமாலை மலர்11 Oct 2018 4:12 PM GMT (Updated: 11 Oct 2018 4:12 PM GMT)
அரியலூரியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் கோவிலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமசந்திரன். இவர் குடும்பத்துடன் 7.9.18 அன்று வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது பின்பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே வந்த மர்மநபர்கள் ராமசந்திரன் மற்றும் அவரது மனைவி, மகள்களை தாக்கி விட்டு 6 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து திருமானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி ஜெயங்கொண்டம் பெரிய வளையம் பகுதியை சேர்ந்த செல்வம் (48), திருவாரூர் மனக்கரையை சேர்ந்த பெரியபாண்டி ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் 2 பேரும் சேர்ந்து ராமசந்திரன் வீட்டில் 6 பவுன் கொள்ளையடித்ததும், அரியலூர், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்களை கோர்ட்டில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவர்கள் 2 பேரும் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதால் அரியலூர் மாவட்ட எஸ்.பி அபினவ்குமார் பரிந்துரையின் பேரில் கலெக்டர் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதைத்
தொடர்ந்து செல்வம், பெரிய பாண்டி ஆகிய 2 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X