என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருட்டு மணல் ஏற்றி வந்த 2 லாரிகள் பறிமுதல்- 2 பேர் கைது
Byமாலை மலர்11 Oct 2018 4:08 PM GMT
செந்துறை அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 2 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள முள்ளுக்குறிச்சி வெள்ளாற்று பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்து ரகசிய இடத்தில் சேமிக்கின்றனர். பின்னர் அதனை லாரிகள் மூலம் வெளி மாவட்டங்களுக்கு கடத்தி செல்கின்றனர். அதே போன்று முள்ளுக்குறிச்சியில் இருந்து 2 டாரஸ் லாரிகளில் மணல் ஏற்றி ஆலத்தியூர் சிமெண்ட் ஆலை வாயில் அருகே வந்துகொண்டு இருந்தது.
அப்போது தளவாய் போலீசார் அந்த இரண்டு லாரிகளையும் மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். அப்போது அதில் ஆற்று மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து தளவாய் போலீசார் மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 லாரிகளையும் கைப்பற்றியதோடு லாரியை ஓட்டி வந்த சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்த சபரிநாதன், முருகேசன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X