search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் அருகே அரசுப்பள்ளியில் மாணவிகளிடம் சில்மி‌ஷம்- ஆசிரியர் சஸ்பெண்டு
    X

    வேலூர் அருகே அரசுப்பள்ளியில் மாணவிகளிடம் சில்மி‌ஷம்- ஆசிரியர் சஸ்பெண்டு

    வேலூர் அரசுப்பள்ளியில் மாணவிகளிடம் அத்துமீறிய புகாரில் ஆசிரியர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    வேலூர்:

    வேலூர் அடுத்த ஊசூர் கோவிந்தரெட்டிபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக உள்ள சதீஷ்குமார் என்பவர் சில நாட்களாக மாணவிகள் சிலரிடம் தொடர்ந்து தவறாக நடந்து கொண்டு சில்மி‌ஷம் செய்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து, மாணவிகள் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகளிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, தலைமை ஆசிரியை புகார் தெரிவித்த மாணவிகளிடம் தனித்தனியாக விசாரித்தார். மேலும் மாவட்ட கல்வி அலுவலர் புலேந்திரனும் பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொண்டார். உடற்கல்வி ஆசிரியர் நேற்று பள்ளிக்கு வரவில்லை.

    மாவட்ட கல்வி அலுவரிடம், தங்களுக்கு நேர்ந்த கொடுமையை மாணவிகள் புகாராக பதிவு செய்தனர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட உடற்கல்வி ஆசிரியர் சதீஷ் குமார் மீது நடவடிக்கை எடுக்க முதன்மை கல்வி அலுவலரிடவம் மாவட்ட கல்வி அலுவலர் பரிந்துரை செய்தார்.

    முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், பாலியல் புகாரில் சிக்கிய ஆசிரியர் சதீஷ்குமாரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், புகார் தொடர்பாக ஆசிரியர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க மாணவ, மாணவிகளின் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×