search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் போக்குவரத்து அதிகாரி வீட்டில் 5 பவுன் நகை கொள்ளை
    X

    மதுரையில் போக்குவரத்து அதிகாரி வீட்டில் 5 பவுன் நகை கொள்ளை

    மதுரையில் போக்குவரத்து அதிகாரி வீட்டில் நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை பைபாஸ் ரோடு, நேரு நகரில் உள்ள மாணிக்கவாசகர் தெருவைச் சேர்ந்தவர் முருகவேல் (வயது 66). இவர் அரசு போக்கு வரத்துக் கழகத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    கடந்த 21-ந் தேதி முருகவேல் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னையில் உள்ள மகன் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்து வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 5 பவுன் நகையை திருடிக் கொண்டு தப்பினர்.

    வீடு திரும்பிய முருகவேல் கதவு உடைக்கப்பட்டு நகை திடுட்டு போனதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×