என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாரிமுனையில் 129 பூக்கடைகளுக்கு சீல் வைப்பு- ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி
Byமாலை மலர்11 Oct 2018 11:50 AM GMT (Updated: 11 Oct 2018 11:50 AM GMT)
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் பாரிமுனை பத்ரியன் தெருவில் உள்ள 129 மொத்த பூக்கடைகளுக்கும் இன்று சீல் வைக்கப்பட்டது.
ராயபுரம்:
பாரிமுனை பூக்கடை பகுதியில் உள்ள பத்ரியன் தெருவில் மொத்த பூ விற்பனை கடைகள் உள்ளன.
போக்குவரத்து நெரிசல் காரணமாக பத்ரியன் தெருவில் உள்ள மொத்த பூ வியாபாரிகளுக்கு கோயம்பேடு மார்க்கெட்டில் பூ விற்பதற்கு கடைகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் தொடர்ந்து பத்ரியன் தெருவில் சிலர் மொத்த பூ வியாபாரம் செய்தனர்.
சீல் வைக்கப்பட்ட கடைகளை உடைத்து விட்டு மீண்டும் பூ வியாபாரம் செய்து வந்தனர். இந்நிலையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில், ‘தங்களை இதே பகுதியில் பூ வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். அதிகாரிகள் வியாபாரிகளுக்கு இடையூறு செய்யக்கூடாது’ என்று குறிப்பிட்டு இருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், பத்ரியன் தெருவில் உள்ள பூக்கடைகளை 48 மணி நேரத்திற்குள் அப்புறப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதையடுத்து பாரிமுனை பத்ரியன் தெருவில் உள்ள 129 மொத்த பூக்கடைகளுக்கும் இன்று சீல் வைக்கப்பட்டது. சி.எம்.டி.ஏ. அதிகாரி, உயர் அதிகாரிகள் பிரேம் ஆனந்த் சுரேந்தர், ராஜேந்திரன் ஆகியோர் மேற்பார்வையில்கடைகள் சீல் வைக்கப்பட்டன. 15 ஊழியர்கள் சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வியாபாரிகள் திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பூக்கடை உதவி கமிஷனர் லட்சுமணன் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பாரிமுனை பூக்கடை பகுதியில் உள்ள பத்ரியன் தெருவில் மொத்த பூ விற்பனை கடைகள் உள்ளன.
போக்குவரத்து நெரிசல் காரணமாக பத்ரியன் தெருவில் உள்ள மொத்த பூ வியாபாரிகளுக்கு கோயம்பேடு மார்க்கெட்டில் பூ விற்பதற்கு கடைகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் தொடர்ந்து பத்ரியன் தெருவில் சிலர் மொத்த பூ வியாபாரம் செய்தனர்.
சீல் வைக்கப்பட்ட கடைகளை உடைத்து விட்டு மீண்டும் பூ வியாபாரம் செய்து வந்தனர். இந்நிலையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில், ‘தங்களை இதே பகுதியில் பூ வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். அதிகாரிகள் வியாபாரிகளுக்கு இடையூறு செய்யக்கூடாது’ என்று குறிப்பிட்டு இருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், பத்ரியன் தெருவில் உள்ள பூக்கடைகளை 48 மணி நேரத்திற்குள் அப்புறப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதையடுத்து பாரிமுனை பத்ரியன் தெருவில் உள்ள 129 மொத்த பூக்கடைகளுக்கும் இன்று சீல் வைக்கப்பட்டது. சி.எம்.டி.ஏ. அதிகாரி, உயர் அதிகாரிகள் பிரேம் ஆனந்த் சுரேந்தர், ராஜேந்திரன் ஆகியோர் மேற்பார்வையில்கடைகள் சீல் வைக்கப்பட்டன. 15 ஊழியர்கள் சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வியாபாரிகள் திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பூக்கடை உதவி கமிஷனர் லட்சுமணன் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X