search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகூரில் கட்டிட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை
    X

    பாகூரில் கட்டிட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை

    பாகூரில் கட்டிட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பாகூர்:

    பாகூர் புதிய காமராஜர் நகர் 4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 35). கட்டிட தொழிலாளி.

    இவருக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். மது குடிக்கும் பழக்கம் உள்ள கோவிந்தன் வேலை முடிந்து மது குடித்து விட்டு வீட்டுக்கு வரும் போது அடிக்கடி முன் கோபம் ஏற்பட்டு கோபித்து கொள்வது வழக்கம்.

    அதுபோல் நேற்று இரவு கோவிந்தன் வீட்டில் சாப்பிட்டு விட்டு திடீரென மனைவியுடன் கோபித்து கொண்டார். பின்னர் கோவிந்தன் தனியாக தூங்க சென்றார். வழக்கம் போல் கணவன் கோபித்து செல்வதாக கோவிந்தம்மாள் எண்ணினார்.

    இன்று காலை 5 மணிக்கு கோவிந்தம்மாள் தூங்கி எழுந்து பார்த்த போது வீட்டில் மின் விசிறி கொக்கியில் சேலையால் தூக்குபோட்ட நிலையில் கணவர் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் இதுகுறித்து பாகூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர் காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்குபதிவு செய்து கோவிந்தன் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×