search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வத்திராயிருப்பு அருகே டிராக்டர் டிரைவர் வெட்டிக்கொலை
    X

    வத்திராயிருப்பு அருகே டிராக்டர் டிரைவர் வெட்டிக்கொலை

    வத்திராயிருப்பு அருகே டிராக்டர் டிரைவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பைச் சேர்ந்தவர் சரவணக்குமார் (வயது 45), டிராக்டர் டிரைவர்.

    இவர் இன்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்றார். இந்த நிலையில் சேது நாராயணபுரம் தியேட்டர் அருகே சரவணக்குமார் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    வத்திராயிருப்பு போலீசார் சம்பவ இடம் சென்று பார்த்தபோது சரவணக்குமார் வெட்டுக் காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவரை யாரோ அரிவாளால் வெட்டிக் கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    சரவணக்குமார் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    Next Story
    ×