search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடிநீர் விநியோகத்திற்கு இடையூறு- மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகி உள்பட 4 பேர் மீது வழக்கு
    X

    குடிநீர் விநியோகத்திற்கு இடையூறு- மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகி உள்பட 4 பேர் மீது வழக்கு

    குடிநீர் விநியோகத்திற்கு இடையூறு செய்தது குறித்து மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    நங்கவள்ளி:

    சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பகுதியை அடுத்த கரிக்காப்பட்டி ஊராட்சி தாண்டான்வளவில் 3 சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டிகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அப்பகுதியை சேர்ந்த சரவணன் (வயது 35), அவரது மனைவி செல்வி(27) மற்றும் பொன்னுவேல் மனைவி சித்ரா(35) ஆகியோர் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்கு குடிநீர் வரவில்லை.

    இதனால் மற்ற பகுதிகளுக்கும், குடிநீர் விநியோகிக்ககூடாது என இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் ஜலகண்டாபுரம் போலீசார், மேற்கண்ட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக நங்கவள்ளி ஒன்றிய மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் வெங்கடேசன்(40) மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. #tamilnews
    Next Story
    ×