search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவெண்ணைநல்லூர் அருகே கட்டிட தொழிலாளி வி‌ஷம் குடித்து தற்கொலை
    X

    திருவெண்ணைநல்லூர் அருகே கட்டிட தொழிலாளி வி‌ஷம் குடித்து தற்கொலை

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே கட்டிட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவெண்ணை நல்லூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஆனைவாரி பகுதியை சேர்ந்தவர் சண்முகம்(வயது45). கட்டிட தொழிலாளி.

    சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்த வி‌ஷத்தை குடித்து மயங்கி விழுந்தார்.

    வீட்டில் இருந்தவர்கள் சண்முகத்தை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சண்முகத்தை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அவருக்கு பன்றி காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பது போல் தெரிந்தது.

    உடனே சண்முகத்தை மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு சண்முகம் பரிதாபமாக இறந்தார். பின்னர் சண்முகத்தின் உடல் பிரேத பரிசோதனை செய்யபட்டது. அதில் சண்முகத்திற்கு பன்றி காய்ச்சல் இல்லை என்பது தெரிய வந்தது.

    இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சண்முகம் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×