என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காரில் செம்மறி ஆடுகள் கடத்தல்- போலீஸ் விசாரணை
Byமாலை மலர்10 Oct 2018 11:40 AM GMT (Updated: 10 Oct 2018 11:40 AM GMT)
மங்கலம்பேட்டை அடுத்த பள்ளிப்பட்டு கிராமத்தில் காரில் செம்மறி ஆடுகளை கடத்தி சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம்:
மங்கலம்பேட்டை அடுத்த பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல் (வயது40). இவர் 50-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். வழக்கம் போல் செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்று விட்டு, மாலை வீட்டின் எதிரே உள்ள பட்டியில் அடைத்தார்.
அப்போது நள்ளிரவு 1.30 மணியளவில் காரில் வந்த மர்மநபர்கள் ஆட்டுப்பட்டியில் இருந்த செம்மறி ஆடுகளை திருடி சென்றனர். அதைப்பார்த்து பழனிவேல் கூச்சலிட்டதும் மர்மநபர்கள் தப்பியோடினர். பின்னர் ஆட்டுப்பட்டியை சென்று பார்க்கையில் 5 செம்மறி ஆடுகளை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் மங்கலம்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X