search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி அருகே குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட வாலிபர்கள் கைது
    X

    தேனி அருகே குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட வாலிபர்கள் கைது

    தேனி அருகே குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

    தேனி:

    தேனி அல்லிநகரம் வள்ளிநகர் பகுதியை சேர்ந்த தமிழ்சூரியா (வயது30), மூர்த்தி (35) இவர்கள் இருவரும் தேனி-பெரியகுளம் சாலையில் உள்ள அணுகிரகா பகுதியில் மது குடித்து விட்டு பொது இடத்தில் தகாதவார்த்தைகளால் பேசி தவறாக நடந்துள்ளனர்.

    பொதுமக்கள் இவர்களை தட்டிகேட்டபோது அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளனர். இது குறித்து அல்லிநகரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த சப்-இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்துக்கு வந்து 2 வாலிபர்களையும் அங்கிருந்து செல்லுமாறு அறிவுரை கூறினார்.

    ஆனால் அவர்கள் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமாரையும் தகாத வார்த்தைகளால் பேசி கீழேகிடந்த கற்களை எடுத்து அவரையும் மிரட்டி தாக்க முயன்றனர். இதனால் போலீசார் அவர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    Next Story
    ×