என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
அ.தி.மு.க. அரசை கண்டித்து துண்டு பிரசுரம்: சுதர்சனம் எம்.எல்.ஏ. உள்பட 300 தி.மு.க.வினர் கைது
ராயபுரம், அக். 10-
அ.தி.மு.க. அரசின் ஊழல்களை பட்டியலிட்டு துண்டு பிரசுரங்களாக விநியோகிக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இதையடுத்து தி.மு.க. வினர் துண்டு பிரசுரங்களை விநியோகித்து வருகின்றனர்.
வடசென்னை வடக்கு மாவட்ட இலக்கிய அணி சார்பில் திருவொற்றியூர் நெடுஞ்சாலை, வண்ணாரப்பேட்டை மார்க்கெட்டில் துண்டு பிரசுரங்களை விநியோகிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதை இலக்கிய அணி மாநில செயலாளர் இந்திர குமாரி தொடங்கி வைத்தார்.
இதில் மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ., இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளர் ரெயின்போ விஜயகுமார் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது இந்திர குமாரி கூறும்போது, “மு.க. ஸ்டாலினை முதல்- அமைச்சர் ஆக்கும்வரை தி.மு.க. இலக்கிய அணி ஓயாது. அ.தி.மு.க. ஆட்சியை அ.தி.மு.க.வினரே கவிழ்த்து விடுவார்கள். மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியபடி அ.தி. மு.க.வின் ஊழல் பட்டியலை பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களாக விநியோகித்து வருகிறோம்“ என்றார்.
பின்னர் மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் பொது மக்களிடம் துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர். அப்போது வந்த வண்ணாரப்பேட்டை போலீசார், “துண்டு பிரசுரங்கள் விநியோகிக்க போலீசாரிடம் அனுமதி பெறவில்லை. இதனால் துண்டு பிரசுரங்களை விநியோகிக்க கூடாது. எனவே அனைவரும் கலைந்து செல்லுங்கள்” என்று தெரிவித்தனர்.
ஆனால் தி.மு.க.வினர் தொடர்ந்து பிரசுரங்களை விநியோகிக்க முயன்றனர். இதையடுத்து சுதர்சனம் எம்.எல்.ஏ. உள்பட 300 தி.மு.க.வினரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அழைத்து சென்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்