search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரக்கோணம் அருகே லாரி மோதி தொழிலாளி பலி
    X

    அரக்கோணம் அருகே லாரி மோதி தொழிலாளி பலி

    அரக்கோணம் அருகே லாரி மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் நெமிலி அருகே உள்ள அசனல்லி குப்பம் பகுதியை சேர்ந்தவர் சம்பத் (வயது 42). கூலி தொழிலாளி. இவர் இன்று காலை நெமிலி தாலுகா அலுவலகம் எதிரே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பனப்பாக்கத்தில் இருந்து நெமிலி நோக்கி வந்த லாரி சம்பத் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இது குறித்து தகவலறிந்த நெமிலி போலீசார் உடலை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×