search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொப்பம்பட்டி பகுதியில் தேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை
    X

    தொப்பம்பட்டி பகுதியில் தேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை

    தென்னை விளைச்சல் குறைவு மற்றும் விலை சரிவு காரணமாக ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி ஒன்றியங்களைச் சேர்ந்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
    சத்திரப்பட்டி:

    திண்டுக்கல் அருகே சத்திரப்பட்டி, விருப்பாட்சி, வீரலப்பட்டி, வேலூர்-அன்னப்பட்டி, வடகாடு மலைப்பகுதிகள், தா. புதுக்கோட்டை, சிந்தலவாடம்பட்டி, தொப்பம்பட்டி ஒன்றியத்தில் போடுவார்பட்டி, கள்ளிமந்தையம், மஞ்சநாயக்கன்பட்டி, தேவத்தூர், கொத்தயம், 16-புதூர் ஆகிய பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தென்னை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    தற்பொழுது தென்னை விளைச்சல் குறைவு மற்றும் விலை சரிவு காரணமாக ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி ஒன்றியங்களைச் சேர்ந்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு டன் தேங்காய் ரூ.36 ஆயிரத்திற்கு காங்கேயம் மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டது.

    தற்போது ஒரு டன் தேங்காய் ரூ.26 ஆயிரம் முதல், ரூ.27 ஆயிரம் வரை மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. சரியான விலை கிடைக்காததால் பறித்த தேங்காய்களை தோப்பில் சேமித்து வைத்துள்ளனர்.

    Next Story
    ×