search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி மாவட்டத்தில் விபத்தில் 2 பேர் பலி
    X

    தேனி மாவட்டத்தில் விபத்தில் 2 பேர் பலி

    தேனி அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் அடையாளம் தெரியாத வாலிபர் பலியானார்.
    தேனி:

    தேனி அருகே சுக்காங்கால்பட்டி வாசகர் சாலை தெருவை சேர்ந்தவர் ஆண்டவர் (வயது35). இவர் குமுளி-தேனி மெயின் ரோட்டில் வந்துகொண்டி ருந்போது கோட்டூர் அருகே எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி உள்ளார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து கோட்டூர் சீலையம்பட்டி வி.ஏ.ஓ. தங்கமுத்து அளித்த புகாரின் பேரில் ஆண்டவரை போலீசார் கைது செய்தனர்.

    மற்றொரு சம்பவம்...

    ஜெயமங்கலம் மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது30). இவர் தனது நண்பர் ராஜபாண்டி (30), இருளப்பன் (29) ஆகியோருடன் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது பெரியகுளம் தென்கரை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் நிலைதடுமாறி ஆட்டோ மீது மோதியதில் ராஜபாண்டி, இருளப்பன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து ராஜா தென்கரை போலீசில் அளித்த புகாரின் பேரில் காரை ஓட்டி வந்த கம்பம் கிழக்கு தெருவை சேர்ந்த அஜித்குமார் (29) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×