என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமணிமுத்தாற்றில் வெள்ளம்- 10 அடி உயரத்திற்கு நுரையுடன் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்
Byமாலை மலர்9 Oct 2018 9:35 AM GMT (Updated: 9 Oct 2018 9:35 AM GMT)
ராசிபுரம் அருகே திருமணிமுத்தாற்றில் சாயக்கழிவுடன் 10 அடி உயரத்திற்கு நுரையுடன் கூடிய தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. #ThirumanimutharuRiver
ராசிபுரம்:
ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நேற்று இரவு கனமழை பெய்தது. அதேபோல் வெண்ணந்தூர், மதியம்பட்டி போன்ற பகுதிகளிலும் மழை பெய்தது. நேற்று சேலத்தில் பெய்த கனமழையால் சேலத்தில் இருந்து வரும் திருமணிமுத்தாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வெளியேறும் சாயக்கழிவு நீர் சுத்திகரிக்காமல் மழை நீரில் கலந்துவிட்டதால் துர்நாற்றம் வீசுகிறது.
மழைக் காலங்களில் இது போன்று மதியம்பட்டி தரைப்பாலத்தின் வழியாக நுரையுடன் கூடிய தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதனால் தரைப்பாலத்தை மேல்மட்ட பாலமாக அமைத்து தரவேண்டும் என பல முறை அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். எனவே இனியாவது விரைந்து மதியம்பட்டி தரைப்பாலத்தை மேல்மட்ட பாலமாக கட்டி தந்து மக்களின் போக்குவரத்துக்கு உதவ வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #ThirumanimutharuRiver
ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நேற்று இரவு கனமழை பெய்தது. அதேபோல் வெண்ணந்தூர், மதியம்பட்டி போன்ற பகுதிகளிலும் மழை பெய்தது. நேற்று சேலத்தில் பெய்த கனமழையால் சேலத்தில் இருந்து வரும் திருமணிமுத்தாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வெளியேறும் சாயக்கழிவு நீர் சுத்திகரிக்காமல் மழை நீரில் கலந்துவிட்டதால் துர்நாற்றம் வீசுகிறது.
இதனால் பொதுமக்களுக்கு பலவிதமான நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ராசிபுரம் தாலுகா வெண்ணந்தூர் அருகேயுள்ள மதியம்பட்டி தரை பாலத்தின் வழியாக செல்லும் திருமணிமுத்தாற்றில் சாயக்கழிவுடன் 10 அடி உயரத்திற்கு நுரையுடன் கூடிய தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மதியம்பட்டி தரைப்பாலம் மூழ்கியது. மேலும் மதியம்பட்டி தரைப்பாலத்தின் வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து தடைப்பட்டு உள்ளது. தரைப்பாலம் நுரையுடன் கூடிய தண்ணீரில் மூழ்கியதால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் வாகனங்கள் வேறு வழியாக சென்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X