search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபால்- வைகோவுடன் ஸ்டாலின் சந்திப்பு
    X

    கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபால்- வைகோவுடன் ஸ்டாலின் சந்திப்பு

    கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபால் மற்றும் வைகோ ஆகியோரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். #NakkeeranGopal #MKStalin
    சென்னை:

    நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின்,  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். நக்கீரன் கோபாலை சந்திக்க அனுமதி வழங்கக்கோரி போலீஸ் நிலைய வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ கைது செய்யப்பட்டார்.

    கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபாலிடம் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். இதேபோல் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள வைகோவையும் ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது துரைமுருகன், ஆ.ராசா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


    பின்னர் செய்தியாளர்களை ஸ்டாலின் சந்தித்து பேசினார். அபபோது, நக்கீரன் கோபால் மீது பாய்ந்துள்ள சட்டம், எச்.ராஜா மற்றும் எஸ்.வி.சேகர் மீது ஏன் பாயவில்லை? அவர்கள் ஏன் கைது செய்யப்படவில்லை? என கேள்வி எழுப்பினார். நேரம் கிடைத்தால் ஆளுநரிடம் நக்கீரன் கோபால் குறித்து பேசப்படும் என்றும் கூறினார். #NakkeeranGopal #MKStalin
    Next Story
    ×