என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுக்கோட்டை நகராட்சியில் டெங்கு கொசு ஒழிக்கும் பணி தீவிரம்
Byமாலை மலர்8 Oct 2018 5:40 PM GMT (Updated: 8 Oct 2018 5:40 PM GMT)
புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் டெங்கு கொசு ஒழிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் டெங்கு கொசு ஒழிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று புதுக்கோட்டையில் உள்ள நிஜாம்காலனி, பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி பகுதி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை கலெக்டர் கணேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து கொசு மருந்து அடிக்கும் பணி, தூய்மை பணிகள் மற்றும் கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்யும் பணிகளையும் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது புதுக்கோட்டை நகர் பகுதிகளில் தினமும் காலை, மாலை இரு வேளைகளில் கொசு மருந்து அடிக்க வேண்டும். அனைத்து பகுதிகளிலும் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்தி தொடர்ந்து தினமும் சுத்தம் செய்ய வேண்டும். தனிநபர் இல்லங்களில் டெங்குகொசு உருவாகும் லார்வா கண்டறியும் பணியினை மேற்கொண்டு டெங்குகொசு உருவாகும் காரணிகளை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் கணேஷ் உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா, நகரமைப்பு ஆய்வாளர் செல்வராஜ் உள்பட நகராட்சி பணியாளர்கள் பலர் உடன் இருந்தனர்.
புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் டெங்கு கொசு ஒழிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று புதுக்கோட்டையில் உள்ள நிஜாம்காலனி, பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி பகுதி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை கலெக்டர் கணேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து கொசு மருந்து அடிக்கும் பணி, தூய்மை பணிகள் மற்றும் கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்யும் பணிகளையும் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது புதுக்கோட்டை நகர் பகுதிகளில் தினமும் காலை, மாலை இரு வேளைகளில் கொசு மருந்து அடிக்க வேண்டும். அனைத்து பகுதிகளிலும் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்தி தொடர்ந்து தினமும் சுத்தம் செய்ய வேண்டும். தனிநபர் இல்லங்களில் டெங்குகொசு உருவாகும் லார்வா கண்டறியும் பணியினை மேற்கொண்டு டெங்குகொசு உருவாகும் காரணிகளை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் கணேஷ் உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா, நகரமைப்பு ஆய்வாளர் செல்வராஜ் உள்பட நகராட்சி பணியாளர்கள் பலர் உடன் இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X