search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி
    X

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி

    அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கு பயன்படுத்தும் பொருட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை முதற்கட்டமாக சரிபார்க்கும் பணி நடைபெற்றது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, 2019-ம் ஆண்டு நடைபெற இருக்கின்ற, நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, அரியலூர் மாவட்டத்தில் அடங்கியுள்ள அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கு பயன்படுத்தும் பொருட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை முதற்கட்டமாக சரிபார்க்கும் பணி நடைபெற்றது.

    அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், நடந்த இந்த பணியை கலெக்டர் விஜயலட்சுமி ஆய்வு செய்தார். மேலும் எந்திரங்களை சரிபார்க்கும் பணியினை, பெங்களூரு பாரத மின்னணு நிறுவனத்தைச் சேர்ந்த, 7 பொறியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த பணியானது வருகிற 11-ந்தேதி வரை நடைபெறும்.

    இந்த ஆய்வின் போது, அரியலூர், மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், முதற்கட்ட சரிபார்க்கும் பணிக்கான பொறுப்பு அலுவலர் மற்றும் துணை கலெக்டர் பாலாஜி, அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் சத்தியநாராயணன், தனி தாசில்தார் (தேர்தல்) சந்திரசேகரன் மற்றும் அரியலூர் தாசில்தார் முத்துலெட்சுமி, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் உடனிருந்தனர்.
    Next Story
    ×