என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி
Byமாலை மலர்8 Oct 2018 4:52 PM GMT (Updated: 8 Oct 2018 4:52 PM GMT)
அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கு பயன்படுத்தும் பொருட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை முதற்கட்டமாக சரிபார்க்கும் பணி நடைபெற்றது.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, 2019-ம் ஆண்டு நடைபெற இருக்கின்ற, நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, அரியலூர் மாவட்டத்தில் அடங்கியுள்ள அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கு பயன்படுத்தும் பொருட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை முதற்கட்டமாக சரிபார்க்கும் பணி நடைபெற்றது.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், நடந்த இந்த பணியை கலெக்டர் விஜயலட்சுமி ஆய்வு செய்தார். மேலும் எந்திரங்களை சரிபார்க்கும் பணியினை, பெங்களூரு பாரத மின்னணு நிறுவனத்தைச் சேர்ந்த, 7 பொறியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த பணியானது வருகிற 11-ந்தேதி வரை நடைபெறும்.
இந்த ஆய்வின் போது, அரியலூர், மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், முதற்கட்ட சரிபார்க்கும் பணிக்கான பொறுப்பு அலுவலர் மற்றும் துணை கலெக்டர் பாலாஜி, அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் சத்தியநாராயணன், தனி தாசில்தார் (தேர்தல்) சந்திரசேகரன் மற்றும் அரியலூர் தாசில்தார் முத்துலெட்சுமி, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் உடனிருந்தனர்.
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, 2019-ம் ஆண்டு நடைபெற இருக்கின்ற, நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, அரியலூர் மாவட்டத்தில் அடங்கியுள்ள அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கு பயன்படுத்தும் பொருட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை முதற்கட்டமாக சரிபார்க்கும் பணி நடைபெற்றது.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், நடந்த இந்த பணியை கலெக்டர் விஜயலட்சுமி ஆய்வு செய்தார். மேலும் எந்திரங்களை சரிபார்க்கும் பணியினை, பெங்களூரு பாரத மின்னணு நிறுவனத்தைச் சேர்ந்த, 7 பொறியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த பணியானது வருகிற 11-ந்தேதி வரை நடைபெறும்.
இந்த ஆய்வின் போது, அரியலூர், மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், முதற்கட்ட சரிபார்க்கும் பணிக்கான பொறுப்பு அலுவலர் மற்றும் துணை கலெக்டர் பாலாஜி, அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் சத்தியநாராயணன், தனி தாசில்தார் (தேர்தல்) சந்திரசேகரன் மற்றும் அரியலூர் தாசில்தார் முத்துலெட்சுமி, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் உடனிருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X