என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தொடரும் கன மழை - 61 அடியை எட்டிய வைகை அணை நீர்மட்டம்
Byமாலை மலர்8 Oct 2018 12:30 PM GMT (Updated: 8 Oct 2018 12:30 PM GMT)
நீர்பிடிப்பு பகுதியில் கன மழை தொடருவதால் வைகை அணை நீர்மட்டம் 61 அடியை எட்டியுள்ளது.
கூடலூர்:
முல்லைப்பெரியாறு அணை மற்றும் வைகை அணை நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த 5 நாட்களில் அணைகளின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 133.50 அடியாக உள்ளது. 3746 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 1906 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இந்த நீர் பாசனத்திற்கு போக வைகை அணையை வந்தடைகிறது. மேலும் மூலவைகையாற்று பகுதியில் மழை தொடர்கிறது.
இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து 2350 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து மதுரை மாவட்ட குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1190 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 60.96 அடியாக உள்ளது. இதே ஆண்டில் மீண்டும் முழு கொள்ளளவை எட்டுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 48 அடியாக உள்ளது. அணைக்கு 135 கன அடி நீர் வருகிறது. நீர் திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.40 அடியாக உள்ளது. 163 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
பெரியாறு 12, தேக்கடி 10.4, கூடலூர் 2.6, உத்தமபாளையம் 2, வீரபாண்டி 27, வைகை அணை 44.6, மஞ்சளாறு 13, சோத்துப்பாறை 48, கொடைக்கானல் 2.4 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
முல்லைப்பெரியாறு அணை மற்றும் வைகை அணை நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த 5 நாட்களில் அணைகளின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 133.50 அடியாக உள்ளது. 3746 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 1906 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இந்த நீர் பாசனத்திற்கு போக வைகை அணையை வந்தடைகிறது. மேலும் மூலவைகையாற்று பகுதியில் மழை தொடர்கிறது.
இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து 2350 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து மதுரை மாவட்ட குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1190 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 60.96 அடியாக உள்ளது. இதே ஆண்டில் மீண்டும் முழு கொள்ளளவை எட்டுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 48 அடியாக உள்ளது. அணைக்கு 135 கன அடி நீர் வருகிறது. நீர் திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.40 அடியாக உள்ளது. 163 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
பெரியாறு 12, தேக்கடி 10.4, கூடலூர் 2.6, உத்தமபாளையம் 2, வீரபாண்டி 27, வைகை அணை 44.6, மஞ்சளாறு 13, சோத்துப்பாறை 48, கொடைக்கானல் 2.4 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X