search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலியமங்கலம் பகுதியில் பலத்த மழை - வீட்டு சுவர் இடிந்து விழுந்து பெண் பலி
    X

    சாலியமங்கலம் பகுதியில் பலத்த மழை - வீட்டு சுவர் இடிந்து விழுந்து பெண் பலி

    சாலியமங்கலம் பகுதியில் பலத்த மழை காரணமாக வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் பெண் பரிதாபமாக பலியானார்.
    சாலியமங்கலம்:

    தஞ்சை மாவட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று தஞ்சை மாவட்டம் சாலியமங்கலம், சடையார்கோவில் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் பலத்த மழை பெய்தது.

    சாலியமங்கலம் அருகே உள்ள நார்த்தேவன்குடிகாடு கிராமத்தில் நேற்று அதிகாலை பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது அதே கிராமத்தை சேர்ந்த சிதம்பரம் மகள் சரோஜா (வயது49) என்பவருடைய ஓட்டு வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது.

    இதில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த சரோஜா இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக பலியானார். அவருக்கு திருமணமாகவில்லை. தனியாக வசித்து வந்தார்.

    இதுகுறித்து வருவாய் ஆய்வாளர் தமிழரசி, கிராம நிர்வாக அதிகாரி மணிமேகலை மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். முன்னதாக வருவாய்த்துறை அதிகாரிகள் மழையால் சேதம் அடைந்த சரோஜாவின் வீட்டை பார்வையிட்டனர். 
    Next Story
    ×