search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் 11 பேர் பணியிட மாற்றம்
    X

    திருச்சியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் 11 பேர் பணியிட மாற்றம்

    திருச்சி மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் 11 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
    திருச்சி:

    திருச்சி மாநகரில் உறையூர் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக இருந்த சுப்பிரமணியன் தில்லை நகர் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கும், கோட்டை குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கோபால் தில்லைநகர் குற்றப்பிரிவுக்கும், மாநகர குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவுக்கும், அரியமங்கலம் சட்டம் ஒழுங்கு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முருகைய்யன் எடமலைப்பட்டிபுதூர் குற்றப்பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இதேபோல் எடமலைப்பட்டி புதூர், ஸ்ரீரங்கம், தில்லை நகர், கோட்டை உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் செயல்முறை பயிற்சி முடித்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் 7 பேர் மாநகருக்குள் உள்ள வெவ்வேறு போலீஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த உத்தரவை மாநகர போலீஸ் கமி‌ஷனர் அமல்ராஜ் பிறப்பித்துள்ளார்.

    Next Story
    ×